புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கியின், லாஸ்பேட்டை கிளை, பாக்கமுடையான்பேட் மெயின்ரோட்டில் உள்ளது. கூட்டுறவு வங்கியில் வட்டி குறைவு என்பதால், லாஸ்பேட்டை மட்டும் இன்றி புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் நகைகள் அடமானம் வைத்துள்ளனர்.
கூட்டுறவு நகர வங்கி லாஸ்பேட்டை கிளையில் வைக்கப்பட்டுள்ள நகைகள் மாற்றப்பட்டு கவரிங் நகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கியின் பரிசோதனை பிரிவு மேலாளர் அன்பழகன் உத்தரவின்படி, லாஸ்பேட்டை கிளை வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மறு ஆய்வு செய்யும் பணி நடந்தது.
கடந்த 18 ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்த பணி நடைபெற்றது. இதில், 28 வாடிக்கையாளர்களின் 80 பைகளில் வைக்கப்பட்டு இருந்த, 3 கிலோ 289 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டு, போலியாக கவரிங் நகைகள் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
நகைகளின் மதிப்பு ரூ. 1.19 கோடி. வங்கியின் லாக்கர் சாவி மேலாளர், காசளர் உள்ளிட்ட 5 பேர் கண்காணிப்பில் இருக்கும். 5 பேரிடம் நடத்திய விசாரணையில், கூட்டுறவு வங்கியின் லாஸ்பேட்டை கிளை தலைமை காசாளர் கணேசன், உதவி காசாளர் விஜயக்குமார் இருவரும் இணைந்து, லாக்கரில் இருந்த வாடிக்கையாளர்களின் 3 கிலோ 289 கிராம் நகைகளை திருடி, அதற்கு பதிலாக போலியாக கவரிங் நகைகளை வைத்துள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக தலைமை வங்கியின் பரிசோதனை பிரிவு மேலாளர் அன்பழகன் அளித்த புகாரின்பேரில், கோரிமேடு போலீசார் தலைமை காசாளர் கணேசன், உதவி காசாளர் கதிர்காம்ம் விஜயக்குமார் @ சரவணண் இருவர் மீதும் திருட்டு, மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் கைது செய்தனர் மேலும் வங்கியில் இருந்து அடகு கடையில் வைத்த நகைகளை மீட்ட போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கியில், ரூ. 1.19 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடி, வங்கி காசாளர்கள் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.