அரியலூர் : அரியலூர் மாவட்டம், குருவாடி கிராமத்தை சேர்ந்த பெண்மணியிடம் குறைந்த வட்டியில், லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல தவணைகளாக 2,13,700 ரூபாய் ஏமாற்றிய குற்றவாளிகளை சைபர் கிரைம் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிசேகரன், (இணைய குற்றப்பிரிவு) வழிகாட்டுதலின்படியும் அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.செங்குட்டுவன், அவர்களின் தலைமையிலான சிறப்பு குழு டெல்லி சென்று மோசடியில், ஈடுபட்ட 2 நபர்களை கைது சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து 1 மடிக்கணினி, 7 செல்போன்கள் மற்றும் 1,25,000 ரூபாய் பணம் பறிமுதல் .மேலும் குற்றவாளிகள் வங்கி கணக்கு முடக்கம்.