திருவள்ளூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காவலர்களை போற்றிப் பெருமைப் படுத்தும் விதமாக ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்படி ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் சரகம் இ. 3 மீஞ்சூர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக உதவி ஆய்வாளர் திருமதி.ஜெயஸ்ரீ ஒரு நாள் மட்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவரை உதவி காவல் கண்காணிப்பாளர் முருகேசன் மீஞ்சூர் காவல் ஆய்வாளர்கள் திரு.பன்னீர்செல்வம், திரு.சிரஞ்சீவி, ஆகியோர் பூச்செண்டு கொடுத்து சந்தன மாலை அணிவித்து வரவேற்றனர் ஒரு நாள் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்ட நிலைய அதிகாரியை காவல் நிலைய காவலர்கள் மகளிர் காவலர்கள் அனைவரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து பணியினை மேற்கொண்டார் மிஞ்சூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார் மீஞ்சூர் சிவன் கோயிலில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கி அத்திப்பட்டில் அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு உணவளித்தார் உதவி ஆய்வாளருக்கு அனைவரும் மகளிர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்