கரூர்: வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சியை பார்வையிட்டு, மாவட்ட காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களுக்கு நினைவூட்டும் கவாத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி 06.01.2023 முதல் நடைபெற்று வருகிறது. இன்று நினைவூட்டும் கவாத்து பயிற்சியில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ.சுந்தரவதனம், இ.கா.ப, அவர்கள் கலந்து கொண்டார். அப்போது கவாத்துப் பயிற்சிகளை பார்வையிட்டு காவலர்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்
மேலும் கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கரூர் மாவட்ட காவல்துறையின் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர காலங்களில் பணிக்கு செல்லும் வாகனங்கள், அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறதா என காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ.சுந்தரவதனம், இ.கா.ப, அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கி, வாகன ஓட்டுநர்களின் நிறை குறைகளை கேட்டறிந்து கொண்டார்