மதுரை: மாவட்டம் உசிலம்பட்டி எல்லைக்கு உட்பட்ட , செக்கானூரணி, திருமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி ,கூட்டுக் கொள்ளை நடைபெற்று வந்த நிலையில் , கொள்ளையர்களை பிடிக்க மதுரை மாவட்ட SP திரு.மணிவண்ணன் IPS, அவர்களின் உத்தரவின் பேரில் 07.08.19. தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் உசிலம்பட்டி அருகே ரோந்துப்பணியில் போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 6 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்யும் பொழுது, சிந்து பட்டி, செக்கானூரணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் என தெரியவந்தது. எனவே DSP. திரு.ராஜா ஆய்வாளர் திரு மாடசாமி, SSI.திரு குணபாலன், தலைமை காவலர் செல்வகுமார், முதல் நிலை காவலர் முத்து தர்மலிங்கம், காவலர் அருவகோடி, ஆகியோர் குற்றவாளிகளை கைது செய்து சுமார் 45 பவுன் தங்க நகைகளை மீட்டனர். குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட SP திரு. மணிவண்ணன்.IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்