மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 27.10.2019 அன்று நடைபெற உள்ள மதுரை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் சிரமமின்றி பொருட்கள் வாங்கி செல்வதற்காகவும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது. அதன் தொடர்சியாக இன்று விலக்குத்தூண் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, பிட்பாக்கெட் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை ஆளில்லா Drone Camera மூலமாக கண்காணிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை