தென்காசி : தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டளை குடியிருப்பு ஒயின்ஷாப் அருகே உள்ள திருமலை பாரில் மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் திரு.சியாம் சுந்தர் அவர்கள் தலைமையில், சார்பு ஆய்வாளர் திரு.சஞ்சய் காந்தி, தனிப்பிரிவு காவலர் திரு.முத்துராஜ், மற்றும் புளியரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதில் பாரில் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த தங்கராசு (68), மணிராஜ்(40), ஆறுமுகம்(59), செல்வின் (51), மற்றும் செந்தில்குமார் (37), ஆகிய ஐந்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 691 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய மகாதேவன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.