சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு .க ஸ்டாலின், அவர்கள் தலைமையில் இன்று (11 /08 /2022), சென்னை கலைவாணர் அரங்கத்தில், நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடக்க விழாவில், நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் தேசிய மாணவர் படை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன், மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களின் நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன், போதைப் பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல் வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.
ஒழிப்பு உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்துக்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஏற்கப்பட்டது. இந்த முயற்சியின் மூலம் ஒரே நாளில் அதிகபட்ச நண்பர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்தமையாக வேர்ல்ட் ரெக்கார்டு யூனியன், மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆகிய அமைப்புகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமலாக்க பணியாகம் குற்றப்புலனாய்வுத்துறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த புதிய பிரிவு உருவாக்கப்பட்டதன் மூலம் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை அடைய பெரும் உதவிகரமாக இருக்கும் போதை ஒழிப்பு தொடர்பான தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள், அமலாக்க பணியாகம் குற்றப்பரனாய்வு துறை, இணையதளம் வாயிலாக பங்கேற்கும் 30 மணி நேர விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே. மணி, அவர்கள் தர்மபுரியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து உரையாற்றி தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே சேகர்பாபு மாண்புமிகு பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ், பொய்யாமொழி தலைமைச் செயலாளர் முனைவர் வே. இறையன்பு இ.ஆ.ப, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு. க. பணிந்திட ரெட்டி இ.ஆ.ப காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு, இ.கா.ப, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சம்பு இ.ஆ.ப, கலோரிகர்பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் திரு.மங்கத் ராம் சர்மா இ.ஆ.ப, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார் இ.ஆ.ப, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் முனைவர் கார்த்திகேயன்இ.ஆ.ப, சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப, காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு. மகேஷ்குமார் இ.கா.ப, அகர்வால் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப, காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.