மதுரை : மதுரை மாவட்டத்தில் இந்த வருடம் நடக்கவிருக்கும் விநாயகர் சதுர்த்தி சிலைகரைப்பு ஊர்வலத்தின் போது, பொதுமக்களிடம் அச்சத்தினை போக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில் மேலூர் உட்கோட்டத்தில், காவல்துறையினர் சார்பாக முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில், ஊமச்சிகுளம் உட்கோட்டம் தேவர் சிலை இருந்து நரசிங்கம் ரோடு வரை மேலூர் பேருந்து நிலையத்தில், துவங்கி திருச்சி ரோடு சந்தப்பேட்டை வரையிலும் காவல்துறையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இவ் அணிவகுப்பில் ஊமச்சிகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி. பிரியதர்ஷினி, மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஆலியஸ் ரெபோனி, அவர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்