புதுக்கோட்டை : புதுக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரி அருகே சிறைத்துறை சார்பில் சிறை கைதிகளை கொண்டு ப்ரீடம் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளை நல்வழிப்படுத்தும் முயற்சியோடு அவர்களின் வருமானத்திற்கு வழிவகுக்கும் வகையில் இந்த பணி கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை சிறைத்துறை பெட்ரோல் பங்க்கில் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு அளிக்கப்பட்டுள்ளது. ஜானகிராமன் என்பவர் பெட்ரோல் பங்க்கில் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை கார்த்திக், புஷ்பராஜ் ஒப்படைத்தனர்.
பணத்தை ஒப்படைத்த கைதிகளை சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி பாராட்டினார்.