சென்னை : தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மற்றும் மேடவாக்கம் பகுதியில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். விழுப்புரம் மேல்மலையனூர், கரூர் நங்கவரம், வேலூர் பிரம்மபுரம் மற்றும் பெரம்பலூர் தாலுகா ஆகிய 5 இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சென்னை பெருநகர காவல் பகுதியில் வானகரம், ஆவடி காவல் ஆணையரக பகுதியான புதூர் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.