திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலை ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலராஜகாபட்டி பாலத்தின் அடியில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்ற பயணிகள் சென்று பார்த்தபோது தூணிபையில், ஆண் குழந்தை இருப்பதாக கண்டு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து ஒட்டன்சத்திரம் High way Patrol போலிசாருக்கு தகவல் கூறி சிறப்பு உதவி ஆய்வாளர் திரு தண்டபாணி அவர்களது தலைமையிலான திரு.சக்தி வடிவேல் ராமலிங்கம் மற்றும் திரு.செல்வம் ஆகியோர்கள் விரைந்து சென்று பாலத்தின் அடியில் இருந்த குழந்தையை மீட்டபோது குழந்தையின் தலையில் சின்ன காயத்துடன் இருப்பதை கண்டு, தூணிபையில் வைத்து வீசி இருக்க கூடும் என அப்பகுதி மக்களிடம் விசாரணை செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் இக்குழந்தையை யார் விட்டுச் சென்றது என விசாரனை செய்து வருகின்றனர்.
விரைந்து செயல்பட்டு குழந்தையை மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா