திருநெல்வேலி : தாழையூத்து காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட ராஜவல்லிபுரம், இந்திரா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மதிபாலன் (27), என்பவர் கொள்ளை, திருட்டு, அடிதடி மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்கிலும், மேலும் ராஜவல்லிபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சுப்பிரமணியன் என்ற புலிக்குட்டி(28), என்பவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கிலும் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள், மேற்படி குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர், அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.