சர்வதேச நண்பர்கள் தினத்தை ( ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு ) முன்னிட்டு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி போக்குவரத்து காவல்துறை & அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை இயக்கத்துடன் இணைந்து தலைக்கவச விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
- தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
- தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் இனிப்பு வழங்கி நாளை முதல் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டும்படி கேட்டுக்கொண்டோம்.
- குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பந்துகள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.
நெல்லை மாநகரை விபத்தில்லா நெல்லையாக்குவதை நோக்கிய பயணம் தொடர்கிறது . காவல்துறையின் முயற்சிக்கு நெல்லை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென காவல் துணை ஆணையர் திரு. சரவணன் கேட்டுக் கொண்டார்.