திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், உடுமலை ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த, அஸ்வின் மனைவி வளர்மதி, மற்றும் ரஞ்சித் மனைவி கவிதாவுக்கும், பணம் கொடுக்கல் வாங்கல், பிரச்னை இருந்தது. இந்நிலையில், கவிதா குடும்பத்தினர் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு, செல்ல திட்டமிட்டு வீட்டை காலி, செய்து கொண்டிருந்தனர். பணத்தை கொடுத்து விட்டு காலி செய்யுமாறு, அஸ்வின் மற்றும் அவரது நண்பரான, ஹிந்து முன்னணி, உடுமலை வடக்கு நகர் பொறுப்பாளராக இருந்த குமரவேல், (24) ஆகியோர் கூறியுள்ளனர்.
இரு தரப்புக்கும் வாக்குவாதம், ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் ரஞ்சித், மற்றும் அவருடன் இருந்த, ஆறு பேர் கொண்ட கூலிப்படை கும்பல் ஆயுதங்களால் தாக்கி, குமரவேலை கொன்று விட்டு, தப்பி ஓடினர்.உடுமலை காவல் துறையினர், வழக்குப் பதிந்து, காரில் தப்பி ஓடிய, திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சிவானந்தம்,(30), துாத்துக்குடி ஆதியப்பன், (45), கோவையை சேர்ந்த செந்தில், (31,) ஆகியோரை பல்லடம் அருகே, மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய ரஞ்சித், கவிதா, மாரி, ஜான்சன் ஆகியோரை தேடி வருகின்றனர்.