கோவை: கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய பகுதியில் சேகர் என்பவர் வசித்துவருகிறார்.
அவரது வீட்டில் ஏனோக்கு@சிவகுமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். சேகர் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது வீட்டில் உள்ள தங்க சங்கிலி-1, மோதிரம்-1, தோடு-1 என மொத்தமாக 4 1/2 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளார். இது சம்மந்தமாக சேகர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் சூலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத் அவர்கள் வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொண்டு மேற்படி திருட்டில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகனான ஏனோக்கு@சிவகுமார்(40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பொருள்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்படுதகவல்தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.