திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பொன்னேரி நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 27 வார்டுகளுக்காக 37 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இதனை பார்வையிடுவதற்காக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1290 காவலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் 1216 வார்டுகளில் பதட்டமான 137 வார்டுகளில் காவலர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் நமது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 200 காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி உள்ளதாகவும்,வாக்குப்பதிவு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும் கூறினார்.இந்த ஆய்வின் போது சிறப்பு காவல் உதவி கண்காணிப்பாளர் திரு.லோகநாதன் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் திரு.சின்னதுரை,திரு.மார்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்