தென்காசி : தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற 165 -க்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தென்காசி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் திரு. கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் அமைக்கப்பட்டு¸ 4 பேரை கைது செய்து¸ அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் தென்காசி அருகில் உள்ள கடையம் புங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35) இவரது தம்பி சுரேஷ் (வயது 32) இவர்களது தாய் பொன்னம்மாள் (வயது 60) பொன்னம்மாளின் கணவர் துரை இவர்கள் 4 பேர்களும் புங்கம் பட்டியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டியுள்ளார்கள். சமீபத்தில் விவசாய நிலங்களை வாங்கி கிணறு தோண்டி பம்புசெட் மூலம் விவசாயம் செய்து வருகிறார்கள்.
இவர்கள் நான்கு பேர்களையும் கைது செய்த தனிப்படை போலீசார் இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 165 கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு நீண்ட காலமாக போலீசார் கைகளில் சிக்காமல் மறைந்து வாழ்ந்து வந்த கொள்ளை கும்பலை கைது செய்ததோடு 3 கிலோ தங்க நகைகளை மீட்டு தந்த தென்காசி டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன், தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல், குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் சாம் சுந்தர், தனிப்பிரிவு தலைமைக் காவலர் முத்துராஜ் ஆகியோரை தென்காசி எஸ்பி சுகுணா சிங் வெகுவாக பாராட்டினார்.. கைது செய்யப்பட்ட நான்கு பேர்களும் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் நீதிபதி அவர்கள் 4 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்..
குற்றவாளிகளை கைது செய்து¸ தங்கத்தை பறிமுதல் செய்த தனிப்படையினரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுணா சிங்.¸ இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்