கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம், இ.கா.ப, அவர்கள் உத்தரவுப்படி மாவட்ட காவல் துறையினருக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில் சைக்கிள் மற்றும் யோகா பயிற்சி மேற்கொண்டனர். மேற்படி சைக்கிள் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கிவைத்தார். சைக்கிள் பேரணியானது கரூர் நகர காவல் நிலையம், பிரேம் மஹால், மனோரா கார்னர் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கரூர் மாவட்ட ஆயுதப்படையில் நிறைவடைந்தது. பின்பு காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சிறந்த யோகா பயிற்சியாளர்களை கொண்டு தியான பயிற்சி, மூச்சுப் பயிற்சி, ஆசன பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், காவலர்களிடம் தினமும் யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.