புதுக்கோட்டை : சென்னை ஒத்திவாக்கத்தில் கடந்த (08.09.2022), ஆம் தேதி முதல் (10.09.2022), ஆம் தேதி வரை மாநில அளவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி சுடும் போட்டியில், மத்திய மண்டலம், திருச்சி சார்பாக கலந்து கொண்ட புதுக்கோட்டை ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் 2198 திரு. சுந்தரலிங்கம், அவர்கள் Pistol பிரிவில் தங்கப்பதக்கமும், நகர காவல் நிலைய தலைமைக் காவலர் 376 திரு.ராஜாராம், அவர்கள் Pistol பிரிவில் வெண்கல பதக்கமும் , வெள்ளனூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் 2343 திரு. ரஞ்சித்குமார், அவர்கள் 200 Yards பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்று மத்திய மண்டலம் திருச்சி சார்பாக துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றனர். மேற்படி வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்ட அணியினரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. வந்திதா பாண்டே இ.கா.ப,அவர்கள் நேரடியாக அழைத்து பாராட்டு தெரிவித்தார்கள்.