செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கிடைத்த ரகசிய தகவலின்படி, படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முரளிகுமார் தலைமையில் ரோந்து பணியில் (GST-I Patrol) ஈடுபட்டிருந்தபோது மாமண்டூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் சுமார் 72 கிலோ எடையுள்ள ரூ.1,08,200 மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து, படாளம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிங்கப்பெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த 1.முஸ்தபா 2.நரசிம்மன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.