செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரதீப் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள், மேற்பார்வையில் திருப்போரூர் காவல் ஆய்வாளர் திரு வெங்கடேசன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.ராஜா திரு.பன்னீர்செல்வம், மற்றும் காவலர்கள் ஆகியவர்கள் மாலை ரோந்து அலுவலக (15/2/2019) ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு திருப்போரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஒண்டர்லேண்ட் காலி வீட்டு மனை அருகே சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரிக்க முற்படும் போது அந்த மூன்று நபர்களும் காவல்துறையினரை தள்ளிவிட்டு தப்பிக்க முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் பிரித்விராஜ் ECR முட்டுக்காடு கார்த்தி,மைசூர், பெங்களூர் மற்றும் வசந்த், இல்லூர் கிராமம் திருப்போரூர் தாலுக்கா எனவும் அவர்கள் இரண்டு கார்களில் வந்ததாகவும் அவர்கள் வந்த கார் இல்லூர் பெரியார் நகர் காப்புக்காடு பகுதியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்கள்.
இதன் அடிப்படையில் மேற்படி இடத்திற்கு சென்று அங்கிருந்து கார்களை சோதனை செய்ததில் அதிலிருந்து உரிமை இல்லாத டபுள் கேன், 0.22 துப்பாக்கி தோட்டாக்கள் 163 வெளிநாட்டு மது பாட்டில்கள் 5,8 கஞ்சா சுமார் அரை கிலோ, மற்றும் உயர் ரக கை கடிகாரங்கள் எட்டு, ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட பிரித்விராஜ்,என்பவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் மேற்படி குற்றவாளிகள் தங்கி இருந்த முட்டுக்காடு அருகில் உள்ள பிரித்விராஜ் வீட்டின் பின்புறம் தோட்டத்தில் இருந்து ஏர்கன் ஒன்னு ஆரோகன் -1 ஆகியவற்றை கைப்பற்றி குற்றவாளிகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் திருப்போரூர் காவல் நிலையம் வந்து குற்றவாளிகள் மீது திருப்போரூர் காவல் நிலையத்தில் உரிமம் இல்லாமல் ஆயுதங்கள் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் வைத்திருந்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்தின் மதிப்பு சுமார் 30 லட்சம் என்பதே தெரிவிக்கப்படுகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்