திண்டுக்கல்: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் என்று கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய வழிபாட்டு தளங்கள் அனைத்தும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் மூலம் இரவு மற்றும் பகல் நேரங்களில் சுழற்சிமுறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போதிய அளவு காவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. தங்கும் விடுதிகள், கல்யாண மண்டபங்கள் அனைத்தும் அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் அந்நிய நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என சோதனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் தனிப்பிரிவு காவலர்கள் ரகசியமாக அந்நிய நபர்களின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
முக்கிய சாலைகள் நெடுஞ்சாலை ரோந்து காவல் வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் அனைத்து வாகன போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அன்னிய நபர்கள் நடமாட்டம் குறித்து கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் Master Control Room மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.