சென்னை : மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடைபெற்ற 41-வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த திரு. நா.செல்வராஜன் என்பவர் ஈட்டி எறிதல், 100 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.