சென்னை: சென்னை முகப்பேறு வேலம்மாள் பள்ளியில் தீயணைப்பு காவல்துறை சார்பாக “கொரானாவிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்” என்ற தலைப்பில் மாநில அளவில் ஓவிய போட்டி நடைபெற்றது.
இதில் பிரணவ் என்ற ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுவன் வரைந்த ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அச்சிறுவனுக்கு முதல் பரிசாக ரூ 3,000/- ரூபாயை தீயணைப்பு துறை காவல் துறை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, IPS அவர்கள் வழங்கினார். பள்ளியின் சார்பாக திரு.சைலேந்திரபாபு அவர்களுக்கு அவரது உருவப்படத்தை நன்றியுணர்வின் அடையாளமாக நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்