செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த TN19 AJ 0437 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவை மர்மநபர்கள் திருடி செல்வதாக கிடைத்த தகவலின்படி, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.B.K.சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.K.கருணாகரன், மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு திருடிய ஆட்டோவை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட அனைவரையும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.