திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி ரோடு முருகபவனத்தை அடுத்து உள்ள மேம்பாலம் அருகே விற்பனைக்காக கொண்டுவந்த கஞ்சா மூட்டையுடன் நின்று கொண்டிருந்த வெள்ளிமலை(55), வினோத்குமார்(25), பால்பாண்டி(22) ஆகிய 3 பேரை திண்டுக்கல் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா