தமிழக காவல்துறையில் 24 பேருக்கு இந்திய குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது தமிழக காவல்துறையில் மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே, உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல்படை பத்தாம் பணி கமாண்டன்ட் ஜெயவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருது 22 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம்
1.விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மனோகர்
2. சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் திரு பாலசுப்பிரமணியம்
3.சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் திரு முல்லை நடராஜன்
4.திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதல் பணி கமெண்ட் திரு ஆனந்தன்
5. புதுடெல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பணி திரு செந்தில்குமார்
6.சென்னை காவல்துறையின் ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையர் திரு ராதாகிருஷ்ணன்
7. ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஐந்தாம் அணி துணை கமாண்டன்ட் சிவன்
8.தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு ரா சுசில்குமார்
9. சென்னை காவல் துறையின் ஆயுதப்படை துணை ஆணையர் திரு நடராஜன்
10. ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயகரன்
11.திருப்பத்தூர் மாவட்டம் யூ பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் திரு ராஜகாளி ஸ்வரன்
12.விருதுநகர் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறை கண்காணிப்பாளர் திரு கருப்பையா
13.சென்னை எஸ்பி சிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு கோபால்
14.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு நமச்சிவாயம்
15.கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் திரு ராமனாதன்
16.சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் திரு செல்வன்
17.சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் திரு சதாசிவம்
18.சென்னை எஸ் பி சி ஐ டி ஆய்வாளர் திரு வெல்கம் இராஜசீலன்
19. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆய்வாளர் சு கௌரி
20. ஈரோடு சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் வே சண்முகம்
21. கோயம்புத்தூர் கியூ பிரிவு பிரிவு உதவி ஆய்வாளர் திரு ரூபன்
22.சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை உதவி ஆய்வாளர் திரு ரங்கசாமி
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விரைவில் நடைபெறும் அரசு விழாவில் இந்த விருது வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது .