தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் ஆ. தாமோர் ஐபிஎஸ் அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார் ஐபிஎஸ், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை விரிவாக்கம் துறையில் பணியாற்றிவந்த டிஐஜி பிரபாகரன் ஐபிஎஸ், சென்னை பெருநகர காவல் சட்டம் ஒழுங்கு கிழக்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு கிழக்கு இணை ஆணையராக இருந்த திரு.எஸ். ராஜேந்திரன் ஐபிஎஸ் சென்னை பெருநகர காவல் போக்குவரத்து மேற்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் போக்குவரத்து மேற்கு இணை ஆணையர் திருமதி. பி. கே. செந்தில் குமாரி ஐபிஎஸ், சென்னை காவல் விரிவாக்கம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பா. மூர்த்தி. ஐபிஎஸ், சென்னை சிபிசிஐடி சிறப்பு விசாரணை பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை NIB CID காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் ஐபிஎஸ், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் புளியந்தோப்பு சரக துணை ஆணையர் திரு. எஸ். ராஜேஷ் கண்ணன் ஐபிஎஸ், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்,
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மணிவண்ணன் ஐபிஎஸ், சென்னை பெருநகர புளியந்தோப்பு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல் அலுவலக திரு. பி. சரவணன் ஐபிஎஸ், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. எஸ். செல்வகுமார், சென்னை அலுவலக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்பு பட்டியலில் இருந்த திருமதி. ஆர்.வி. ரம்யா பாரதி ஐபிஎஸ் சைபர் அரங்கம் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.