திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்கள் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்களை எளிதில் கண்காணிக்கவும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக தாராபுரம், அலங்கியம் ஜங்ஷன், உடுமலைப்பேட்டை ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் கணினி, 16 சிசிடிவி கேமராக்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கான நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்தார்.இதில் ரோட்டரி கிளப் தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.