செங்கல்பட்டு : நவம்பர் 19-ம் தேதி சர்வதேச சிறார் கொடுமைகள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதிப், இ.கா.ப., அவர்களின் வழிக்காட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்நிலையங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது, இதில் பள்ளி குழந்தைகளுக்கு காவல்நிலைய செயல்பாடுகள், கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளின் அவசர உதவி எண் – 1098