கோவை கிரைம்ஸ்

வீட்டில் 9 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது

கோவை ஆக19 கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு, பூச்சியூரை சேர்ந்தவர் சிவ சந்திரன் ( வயது 38) இவர் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர்களுக்கு 3பெண் குழந்தைகள் உள்ளனர் .அவர்களை பார்த்துக் கொள்வதற்கு குளத்துப்பாளையத்தை கலைச்செல்வி (வயது 46) என்பவரை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அவர் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு வராமல் இருந்தார். இந்த நிலையில் சிவச்சந்திரன் தனது குழந்தைகளின் காதணி விழாவுக்காக பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்து 9 பவுன் நகைகளை காணவில்லை. இது குறித்துவடவள்ளி போலீசில் சிவச்சந்திரன் புகார் செய்தார். புகாரில் வேலைக்கார பெண் கலைச்செல்வி மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார் .அதன் பேரில் கலைச்செல்வியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது நகை திருடியதை ஒப்புக்கொண்டார்.அவரை போலீசார் கைது செய்தனர். நகைமீட்கப்பட்டது.


பஸ்சில் – வீட்டில் திருடிய 2 பெண்கள் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள சொலவம் பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சரஸ்வதி ( வயது 60) இவர் நேற்று வெங்கிட்டாபுரத்திலிருந்து டவுன்ஹாலுக்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தார்.பஸ் டவுன்ஹால் சென்றடைந்ததும் பஸ்சை விட்டு இறங்கி கழுத்தில் கிடந்த செயினை பார்த்தார் .அதை காணவில்லை .3 பவுன் செயினை யாரோ பஸ்சினுள் திருடிவிட்டார்கள்.இதுகுறித்து சரஸ்வதி உக்கடம் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி ரோட்டை சேர்ந்தவர் ஸ்டீபன் செய். இவரது மனைவி பான்சி மேரி (வயது 36) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .கடந்த மாதம் 10 – 7 – 20 22அன்று வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் சென்று விட்டார். கடந்த 16-ந்தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 2பவுன் எடை கொண்ட 3 மோதிரம், பணம் ரூ. 84 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து பான்சி மேரி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் வீட்டில் 7 மாதங்களாக வேலை செய்து வந்த ராமநாதபுரம் மருதூரைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி கவிதா ( வயது 45 ) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து நகை மீட்கப்பட்டது..இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

16 – வயது மாணவி கர்ப்பம். போக்சோவில் வாலிபர் கைது

கோவை ஆக 19 கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி .இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் திருச்சி மாவட்டம் ,தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பரத் ( வயது 20) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 10 – ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது .அது நாளடைவில் காதலாக மாறியது .இதையடுத்து அந்த வாலிபர் மாணவியிடம் ஆசைவாரத்தை கூறி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது உடனே மனைவியின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறினர் .இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து கேட்டனர். அப்போது அவர் பரத்என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து கூறினார். இது குறித்து மாணவியின் பெற்ற துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரணயில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பரத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist