நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்வர வேண்டும் எனவும் மேலும் உட்கோட்டம் ,காவல் நிலையம், மற்றும் ஆயுதப்படை வளாகம் என அனைத்து வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடவேண்டும் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS ., அவர்கள் மரக்கன்று நடுவதை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் அலுவலகத்தில் முதல் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்கள் பின்னர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் ,அமைச்சு பணியாளர்கள், காவல் ஆளிநர்கள் அனைவரும் வளாகம் முழுதும் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாட்டினை செய்வதற்கு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்.
நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பிரகாஷ்