கரூர்: கரூர் மாவட்ட காவல்துறை தமிழகம் முழுவதும் தமிழக காவல் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்கள் அடிப்படை பயிற்சி பெற்றுவந்தனர். இதில் கரூர் மாவட்டத்தில் 97 பயிற்சி காவலர்கள் பயிற்சிக் காவலராக (14.03.2022), – ம் தேதி முதல் கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பயிற்சி பெற்றுவந்தனர். மேற்படி பயிற்சிக் காவலர்களின் பயிற்சி காலம் முடிந்ததை அடுத்து, பயிற்சிக் காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா (19.10.2022), – ம் தேதி மாலை 4.30 மணியளவில் கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், கரூர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வருமான திரு.E.சுந்தரவதனம் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்வணிவகுப்பு விழாவில் தலைமை விருந்தினராக திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.A.சரவணசுந்தர் இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.