புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுக்கா, நடுப்பட்டியில் திரு, M.S. கோவிந்தராஜன், அவர்களுக்கு சொந்தமான கரும்பு தோட்டம் சுமார் 5 ஏக்கரும், வாழைத்தோட்டம் சுமார் 10 ஏக்கரும் தீ பிடித்து எரிந்து தீ மளமள வென தோட்டம் முழுவதும் பற்றி எரிந்ததால் கந்தர்வக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தகவலறிந்த கந்தர்வக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் திரு, ஆரோக்கியசாமி அவர்கள் தலைமையில் விரைந்து சென்ற கந்தர்வக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர்,அதனால் எஞ்சிய 20 ஏக்கர் கரும்புத்தோட்டம் காப்பாற்றப்பட்டது.