மதுரை: நேற்று (04.08.2019) D2 செல்லூர் (ச&ஒ) காவல்நிலைய ஆய்வாளர் திரு.கோட்டைசாமி, உதவி ஆய்வாளர் திரு.சோமு, C2 சுப்ரமணியபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சக்திவேல் D1 தல்லாகுளம் உதவி ஆய்வாளர்கள் திரு.செல்வகுமார், திரு.நேரு மற்றும் ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களின் இருப்பிடத்தை சோதனை செய்த போது அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராதாகிருஷ்ணன் 58/19, கணேசன் 38/19, சுந்தர் 31/19, பாலகிருஷ்ணன் 48/19, தங்கபாண்டியன் 30/19 ஆகிய ஐந்து நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து 127 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்