ரோஜா குல்கந்து : ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் வெகுவாகக் குறையும். இருதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படுவதும் உண்டு. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிடலாம். மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். குறிப்பாக PCOD நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்தாக விளங்குகிறது. குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண், குடல்புண்கள் குணப்படுத்த உதவுகிறது. ஒரு டீஸ்பூன் குல்கந்துவை தண்ணீரில் கலந்து குடித்து, அதில் உள்ள ரோஜா இதழ்களை மென்று சாப்பிடலாம். குளிர்ந்த பாலில், ஒரு டீஸ்பூன் குல்கந்துவை கலந்து குடிக்கலாம். குல்கந்துவை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெற்றிலையில் வைத்து மடித்து சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்களும் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க சாப்பிடலாம்.