திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பத்து இலக்க எண்களுடன் புதிய வாக்காளர் அட்டையை அலுவலர்கள் வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர். வாக்காளர்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை 16 இலக்க எண்களை கொண்டதாக உள்ளது. தற்போது 10 இலக்க எண்களுடன் புதிய வண்ண புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, புதிய வாக்காளர் அடையாள அட்டையில் பழைய, புதிய எண் இரண்டும் இடம் பெற்றிருக்கும்.புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவருக்கும் 10 இலக்க எண் கொண்ட அட்டை வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தடைபட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் புதிய அடையாள அட்டையை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர்.
முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் எம்.எஸ்.பி பள்ளி எதிர்புறம் அமைந்துள்ள 14 வது NCC பட்டாலியன் கேண்டினில் 3 மாதங்களாக தங்களுக்கு வீட்டு உபயோகப்பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை என கூறி ராணுவ வீரர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா