இராணிப்பேட்டை : தற்போது பள்ளி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பள்ளிகளுக்கு செல்வது அதிகரித்து வருகிறது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில், பரவி சர்ச்சைக்கு உள்ளாகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் தீவிர சோதனை மற்றும் மாணவர்களிடையே பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா காவல் ஆய்வாளர் திரு. பழனிவேல், அவர்கள் அரக்கோணம் பகுதியை சுற்றியுள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். விலைமதிப்பில்லாத உயிரை படிக்கட்டில் பயணம் செய்து விரையம் செய்து விட வேண்டாம். என்று மாணவர்களுக்கு புரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். விழிப்புணர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இனி படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்ய மாட்டோம், என்று உறுதியளித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்