மதுரை: மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (31.07.2019) D1-தல்லாகுளம் (ச&ஒ) காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு.நேரு, திரு.செல்வகுமார், திருமதி.அமுதவள்ளி ஆகியோர்கள் மதுரை மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க ரோந்து காவலர்களுடன் தல்லாகுளம் பகுதியில் உள்ள பெட்டி கடைகளை சோதனை செய்தபோது அங்கு புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி புகையிலை பொருட்களை விற்பனை செய்த மதுரை இடையபபட்டியை சேர்ந்த பெரியவீரணன் 48/19 த/பெ. முத்தன்னன், மதுரை செல்லூரை சேர்ந்த ராதா 60/19 த/பெ. அசோகன் மற்று….0000ம் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மணிகண்டன் 43/19 த/பெ. விஸ்வநாதன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 535 புகையிலை பாக்கெட்டுகள், 22 சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பணம் ரூ.2320/- ஆகியவையும் கைப்பற்றப்பட்டது
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்