திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அப்பெண் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த எரியோடு காவல் நிலைய காவலர் திரு.குமரேசன் அவர்கள் தனது வாகனத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை 14 கிலோ மீட்டர் சினிமா பாணியில் துரத்திச் சென்று ஒருவனை மடக்கிப் பிடித்தார். மற்றொருவர் தப்பிச் சென்று விட தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.வேல்முருகன் மற்றும் தனிப்பிரிவு காவலர் திரு.தினேஷ் பிரபு ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்ட மற்றொரு நபரை மடக்கிப் பிடித்தனர். துரிதமாக செயல்பட்டு நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை பிடித்த போலீசாரை மாவட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
திண்டுக்கலில் இருந்து நமது நிருபர்
திரு.மீரா மைதீன்