திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலையம், காவல்துறை வரலாற்றில் புதிய முயற்சியாக ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கடையநல்லூர் காவல் நிலைய போலீசார் ஒன்றிணைந்து இன்று ஆசிரியர் தின விழாவை கொண்டாடும் நல்லெண்ணத்துடனும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் நட்புறவை வளர்க்கும் விதமாக கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பள்ளிக்கு உதவி ஆய்வாளர் திரு விஜயகுமார், உதவி ஆய்வாளர் திரு அமிர்தராஜ், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் (பயிற்சி)கோபால் மற்றும் காவல்துறையினர் சென்று ஆசிரியர் தினத்தை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி அவர்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.
பின்பு காவல்துறையினரும் மாணவர்களும் இணைந்து பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா நினைவு கூறும் வகையில் மரக்கன்றுகள் நட்டனர். காவல்துறையினர் பள்ளிக்கு வந்து இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என ஆசிரியர்கள் காவல் துறையினரை பாராட்டினர்.