42 வயதில் தன் சொந்த முயற்சியில், பயிற்சியாளர்கள் வழிகாட்டுதல் இல்லாமல், விளையாட ஆரம்பித்து, கடந்த எட்டு ஆண்டுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட 65 பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஆயுதப்படைத் தலைமைப் பெண்காவலர் ஶ்ரீரஞ்சனி.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த இவர் 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறப்புக் காவல்படை காவலர் பணியில் சேர்ந்தார். இதற்கு அவரது குடும்பத்தில் பெரிதாக வரவேற்ப்பு இல்லாத போதும், விளையாட்டு மீது கொண்ட தனிப்பட்ட ஆர்வத்தால், பயிற்சியாளர் யாரும் உதவியின்றி, தினந்தோறும் அயராது உடற்பயிற்சியினால், 42 வயதில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் இன்று 65 பதக்கங்கள் பெற்று உள்ளார். இன்று அவருக்கு 50 வயதாகின்றது. சாதிக்க வயதில்லை என்பதை இன்றைய சமூகத்திற்கு உணர்த்தும் விதமாக இன்றும் தன் ஓட்டத்தை தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றார்.
தன் வாழ்க்கையை பிறருக்கு முன் உதாரணமாக சாதித்து காட்டிய பெண்காவலர் ஶ்ரீரஞ்சனி அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்